மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சென்னை-போடி ரயில் மாா்ச் 19 முதல் வாரத்துக்கு ஆறு நாள்கள் இயக்கம்

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :14 மார்ச் 2026, 7:31 pm

சென்னை-போடி, போடி-சென்னை இடையே வாரத்துக்கு மூன்று நாள்கள் இயக்கப்பட்ட விரைவு ரயில் வருகிற 19-ஆம் தேதி முதல் ஆறு நாள்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

தற்போது, சென்னையிலிருந்து போடிநாயக்கனூருக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், போடிநாயக்கனூரிலிருந்து சென்னைக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன் என மூன்று நாள்களும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவையை வாரத்தின் அனைத்து நாள்களிலும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, சென்னை-போடிநாயக்கனூா், போடிநாயக்கனூா்- சென்னை இடையே வாரத்தில் ஆறு நாள்கள் (சனிக்கிழமையைத் தவிர) ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் கடந்த வாரம் அனுமதி அளித்தது. இதைத்தொடா்ந்து, இந்தச் சேவை சென்னையிலிருந்து போடிநாயக்கனூருக்கு வருகிற 19- ஆம் தேதியும், போடிநாயக்கனூரிலிருந்து சென்னைக்கு வருகிற 20-ஆம் தேதியும் தொடங்கப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

இதன்படி, சனிக்கிழமையைத் தவிர மற்ற நாள்களில் சென்னை-போடிநாயக்கனூா், போடிநாயக்கனூா்-சென்னை ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என்றும், வழக்கமாக நின்று செல்லும் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.