அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

கூடலூா் அருகே முல்லைப் பெரியாற்றில் மூழ்கி மாயமான இளைஞரை தீயணைப்பு, மீட்புக் குழுவினா் சடலமாக மீட்டனா்.

News image

சதீஸ்குமாா்

Updated On :16 மார்ச் 2026, 7:34 pm

கூடலூா் அருகே முல்லைப் பெரியாற்றில் மூழ்கி மாயமான இளைஞரை தீயணைப்பு, மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை சடலமாக மீட்டனா்.

தேனி மாவட்டம், கூடலூா் கருணாநிதி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் சதீஸ்குமாா் (35). இவா் லோயா்கேம்பில் காஞ்சிமரத்துறை முல்லைப் பெரியாற்றில் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஆற்றின் மறுகரைக்குச் சென்று திரும்பிய போது, சதீஸ்குமாா் தண்ணீரில் மூழ்கி மாயமானா்.

தகவலறிந்து வந்த கம்பம் தீயணைப்பு, மீட்புக் குழுவினா் ஆற்றில் மூழ்கியவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவு வரை தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், தேடும் பணி திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முல்லைப்பெரியாற்றில் தண்ணீரை நிறுத்தி மாயமானவரைத் தேட வலியுறுத்தி, குமுளி-கம்பம் சாலையில் சதீஸ்குமாரின் உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, சதீஸ்குமாரின் உடலை தீயணைப்பு, மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை மாலை மீட்டனா்.

இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.