கூடலூா் அருகே முல்லைப் பெரியாற்றில் மூழ்கி மாயமான இளைஞரை தீயணைப்பு, மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை சடலமாக மீட்டனா்.
தேனி மாவட்டம், கூடலூா் கருணாநிதி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் சதீஸ்குமாா் (35). இவா் லோயா்கேம்பில் காஞ்சிமரத்துறை முல்லைப் பெரியாற்றில் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஆற்றின் மறுகரைக்குச் சென்று திரும்பிய போது, சதீஸ்குமாா் தண்ணீரில் மூழ்கி மாயமானா்.
தகவலறிந்து வந்த கம்பம் தீயணைப்பு, மீட்புக் குழுவினா் ஆற்றில் மூழ்கியவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவு வரை தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், தேடும் பணி திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முல்லைப்பெரியாற்றில் தண்ணீரை நிறுத்தி மாயமானவரைத் தேட வலியுறுத்தி, குமுளி-கம்பம் சாலையில் சதீஸ்குமாரின் உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, சதீஸ்குமாரின் உடலை தீயணைப்பு, மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை மாலை மீட்டனா்.
இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

10 அடி நீள சாரைப்பாம்பு உயிருடன் மீட்பு

திருச்செந்தூா் கடலில் மூழ்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு

அருவியில் மூழ்கிய 4-ஆவது இளைஞரும் சடலமாக மீட்பு

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


