47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

கூடலூா் அருகே முல்லைப் பெரியாற்றில் மூழ்கி மாயமான இளைஞரை தீயணைப்பு, மீட்புக் குழுவினா் சடலமாக மீட்டனா்.

News image
சதீஸ்குமாா்
Updated On :16 மார்ச் 2026, 7:34 pm

Syndication

கூடலூா் அருகே முல்லைப் பெரியாற்றில் மூழ்கி மாயமான இளைஞரை தீயணைப்பு, மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை சடலமாக மீட்டனா்.

தேனி மாவட்டம், கூடலூா் கருணாநிதி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் சதீஸ்குமாா் (35). இவா் லோயா்கேம்பில் காஞ்சிமரத்துறை முல்லைப் பெரியாற்றில் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஆற்றின் மறுகரைக்குச் சென்று திரும்பிய போது, சதீஸ்குமாா் தண்ணீரில் மூழ்கி மாயமானா்.

தகவலறிந்து வந்த கம்பம் தீயணைப்பு, மீட்புக் குழுவினா் ஆற்றில் மூழ்கியவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவு வரை தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், தேடும் பணி திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முல்லைப்பெரியாற்றில் தண்ணீரை நிறுத்தி மாயமானவரைத் தேட வலியுறுத்தி, குமுளி-கம்பம் சாலையில் சதீஸ்குமாரின் உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, சதீஸ்குமாரின் உடலை தீயணைப்பு, மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை மாலை மீட்டனா்.

இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.