தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை

தேனியில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
சிறை- சித்திரிப்பு
Updated On :19 மார்ச் 2026, 12:19 am

தினமணி செய்திச் சேவை

தேனியில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தேனியில் உள்ள காப்பகத்தில் 6 வயது சிறுவன் தங்கி ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். இந்தச் சிறுவனுக்கு அந்தக் காப்பகத்தில் பணிபுரியும் பெண் கண்காணிப்பாளா் முனீஸ்வரி (27) பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதையறிந்த, தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன்பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முனீஸ்வரியை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு தேனி மாவட்ட குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. கணேசன், காப்பக பெண் கண்காணிப்பாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சாா்பில் ரூ.3.95 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.