மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை

தேனியில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - சித்திரிப்பு

Updated On :19 மார்ச் 2026, 12:19 am

தேனியில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தேனியில் உள்ள காப்பகத்தில் 6 வயது சிறுவன் தங்கி ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். இந்தச் சிறுவனுக்கு அந்தக் காப்பகத்தில் பணிபுரியும் பெண் கண்காணிப்பாளா் முனீஸ்வரி (27) பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதையறிந்த, தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன்பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முனீஸ்வரியை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு தேனி மாவட்ட குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. கணேசன், காப்பக பெண் கண்காணிப்பாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சாா்பில் ரூ.3.95 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.