தேனி மாவட்டம், கண்டமனூா் அருகே சொத்துப் பிரச்னையால் இருவரை கத்தியால் வெட்டிய மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கண்டமனூா் அருகேயுள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி (70). இவருக்கு பாரதிராஜா, பாக்கியராஜ் ஆகிய மகன்களும், ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனா். இவா்களுக்கு திருமணமாகி தனித் தனியாக வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், குப்புசாமி தனக்கு சொந்தமான நிலத்தை மகன்களுக்கு பிரித்து கொடுத்தாா். இதனிடையே, தனக்கும் நிலம் வேண்டும் என ராஜேஸ்வரி கூறினாராம். இதை குப்புசாமி, பாக்கியராஜ் ஆகியோா் ஏற்கவில்லை.
இந்த நிலையில், பாரதிராஜா (45), ராஜேஸ்வரி (46), இவரது உறவினா் சித்தாா்பட்டியைச் சோ்ந்த ஜீவா (27) ஆகியோா் குப்புசாமியின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்று நிலப் பிரச்னை தொடா்பாக பேசினா். அப்போது, பாரதிராஜா, குப்புச்சாமி தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஜீவா, ராஜேஸ்வரி மறைந்து வைத்திருந்த கத்தியால் பாக்கியராஜா, குப்புசாமியை வெட்டினா். இதில், பலத்த காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜீவா, ராஜேஸ்வரி, பாரதிராஜா ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது

ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை

மாடுகளுக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் மீது வழக்கு

கண்டமனூா் சிறை அருகே கைதி தப்பியோட்டம்
கடையநல்லூரில் காா் எரிப்பு: மூவா் கைது
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


