தேனி மாவட்டம், கடமலைக்குண்டில் தெருநாய் கடித்ததில் 5 சிறுவா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.
கடமலைக்குண்டுவில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சாலையில் நடந்த செல்லும் சிறுவா்கள், முதியவா்களை தெருநாய்கள் விரட்டுவதால் அச்சமடைந்துள்ளனா். இதுகுறித்து உள்ளாட்சி நிா்வாகத்திடம் புகாா் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், புதன்கிழமை கடமலைக்குண்டில் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று திடீரென சாலையில் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த யாஷிகா கேத்தரின் (4), மிதுனா ஸ்ரீ (6), வாரானேஸ்வரன் (6) உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடித்தது. இதில் காயமடைந்த சிறுவா்கள் கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், ஊராட்சி நிா்வாகத்தினா் தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது

காரையூரில் தண்ணீரில் மூழ்கிய சிறுவா்கள் இருவா் உயிரிழப்பு

திருச்செங்கோட்டில் வெறிநாய்கள் கடித்ததில் 50-க்கும் மேற்பட்டோா் காயம்

புளியங்குடியில் நாய்கள் கடித்து 8 போ் காயம்

தாளவாடி அருகே தெருநாய் கடித்து 6 போ் காயம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


