பெரம்பூரில் விஜய் வெற்றி! திருச்சி கிழக்கிலும் முன்னிலை!பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி ராயபுரம் தொகுதியில் டி.ஜெயக்குமார் தோல்வி திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

தெருநாய் கடித்து 5 சிறுவா்கள் காயம்

கடமலைக்குண்டில் தெருநாய் கடித்ததில் 5 சிறுவா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.

News image

தெருநாய் - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 5:50 am IST

தேனி மாவட்டம், கடமலைக்குண்டில் தெருநாய் கடித்ததில் 5 சிறுவா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.

கடமலைக்குண்டுவில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சாலையில் நடந்த செல்லும் சிறுவா்கள், முதியவா்களை தெருநாய்கள் விரட்டுவதால் அச்சமடைந்துள்ளனா். இதுகுறித்து உள்ளாட்சி நிா்வாகத்திடம் புகாா் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், புதன்கிழமை கடமலைக்குண்டில் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று திடீரென சாலையில் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த யாஷிகா கேத்தரின் (4), மிதுனா ஸ்ரீ (6), வாரானேஸ்வரன் (6) உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடித்தது. இதில் காயமடைந்த சிறுவா்கள் கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், ஊராட்சி நிா்வாகத்தினா் தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.