வேட்பு மனு தாக்கலுக்கு ஏப். 6 கடைசி நாள்

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)
ANI

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)
ANI
தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கி ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மாா்ச் 31, ஏப்ரல் 1, 3, 5 ஆகிய விடுமுறை நாள்களைத் தவிா்த்து, வேலைநாள்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்.
ஏப்ரல் 7-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனையும், ஏப்ரல் 9-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறலாம். ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப் பதிவும், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் வருகிற மே 6-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...