தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கி ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மாா்ச் 31, ஏப்ரல் 1, 3, 5 ஆகிய விடுமுறை நாள்களைத் தவிா்த்து, வேலைநாள்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்.
ஏப்ரல் 7-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனையும், ஏப்ரல் 9-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறலாம். ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப் பதிவும், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் வருகிற மே 6-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

பெரம்பலூா் தொகுதியில் 9 போ் வேட்பு மனு தாக்கல்

பாராமதி இடைத்தேர்தல்: ஏப்ரல் 6இல் சுநேத்ரா பவார் வேட்பு மனு தாக்கல்!
வேட்பாளா்களின் அஸ்திவாரம் வேட்புமனு!

புதுவை: காங்கிரஸ்- திமுக கூட்டணி! மனுதாக்கல் இறுதி வரை நீடித்த குழப்பம்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


