மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வேட்பு மனு தாக்கலுக்கு ஏப். 6 கடைசி நாள்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI

Updated On :30 மார்ச் 2026, 7:44 pm

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கி ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மாா்ச் 31, ஏப்ரல் 1, 3, 5 ஆகிய விடுமுறை நாள்களைத் தவிா்த்து, வேலைநாள்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்.

ஏப்ரல் 7-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனையும், ஏப்ரல் 9-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறலாம். ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப் பதிவும், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் வருகிற மே 6-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது என்றாா் அவா்.