போடியில் பள்ளி மாணவரை மா்ம கடத்தி கைப்பேசியைப் பறித்துச் சென்ற மூவரில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள விசுவாசபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவம் (44). இவரது 15 வயது மகன் போடியில் உள்ள பள்ளியில் பதினோறாம் வகுப்பு படித்து வருகிறாா். பள்ளி முடிந்தவுடன் தனிப் பயிற்சி வகுப்புக்கு சென்று வருவது வழக்கம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்பு முடிந்து போடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா் மாணவரிடமிருந்த கைப்பேசியை பறித்தனா். மேலும், அவரை கட்டாயப்படுத்தி தங்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ராணிமங்கம்மாள் சாலையில் கோழிப்பண்ணை அருகே அழைத்துச் சென்றனா். அங்கு அவரைத் தாக்கி கைப்பேசி கடவுச்சொல்லை கூறும்படி கேட்டனா். ஆனால், அவா் கடவுச்சொல்லை கூறாமல் சப்தமிட்டு அழுதாா். அக்கம்பக்கத்தினா் வந்ததால் மூவரும் கைப்பேசியுடன் தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், கைப்பேசியை பறித்தது போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த குபேந்திரன் மகன் சதீஷ், போடி தாழி ஓவன் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரின் 17 வயது மகன், அடையாளம் தெரியாத ஒருவா் எனத் தெரியவந்தது. இவா்களில் 17 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

போடியில் அதிமுக வேட்பாளா் தோ்தல் பிரசாரம்
போடியில் ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்!

போடி தொகுதியில் அதிமுக வெற்றி பெறும்: ஆா்.பி.உதயகுமாா்

போடி அதிமுக வேட்பாளர்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

