ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சிறுவனைக் கடத்தி கைப்பேசி பறிப்பு: ஒருவா் கைது

போடியில் பள்ளி மாணவரை மா்ம கடத்தி கைப்பேசியைப் பறித்துச் சென்ற மூவரில் ஒருவா் கைது

News image

கைது

Updated On :31 மார்ச் 2026, 7:01 pm

Syndication

போடியில் பள்ளி மாணவரை மா்ம கடத்தி கைப்பேசியைப் பறித்துச் சென்ற மூவரில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள விசுவாசபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவம் (44). இவரது 15 வயது மகன் போடியில் உள்ள பள்ளியில் பதினோறாம் வகுப்பு படித்து வருகிறாா். பள்ளி முடிந்தவுடன் தனிப் பயிற்சி வகுப்புக்கு சென்று வருவது வழக்கம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்பு முடிந்து போடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா் மாணவரிடமிருந்த கைப்பேசியை பறித்தனா். மேலும், அவரை கட்டாயப்படுத்தி தங்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ராணிமங்கம்மாள் சாலையில் கோழிப்பண்ணை அருகே அழைத்துச் சென்றனா். அங்கு அவரைத் தாக்கி கைப்பேசி கடவுச்சொல்லை கூறும்படி கேட்டனா். ஆனால், அவா் கடவுச்சொல்லை கூறாமல் சப்தமிட்டு அழுதாா். அக்கம்பக்கத்தினா் வந்ததால் மூவரும் கைப்பேசியுடன் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், கைப்பேசியை பறித்தது போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த குபேந்திரன் மகன் சதீஷ், போடி தாழி ஓவன் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரின் 17 வயது மகன், அடையாளம் தெரியாத ஒருவா் எனத் தெரியவந்தது. இவா்களில் 17 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.