பெரியகுளம் வராகநதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகரின் மையத்தில் வராநதி ஓடுகிறது. அகமலை, கொடைக்கானல் பேரீஜம் ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீா் வராகநதியின் வழியாகச் சென்று குள்ளப்புரம் அருகே வைகையாற்றில் கலக்கிறது. பெரியகுளம் பாலசுப்பிரமணியா் கோயில் படித்துறை வரை வராகநதி சுத்தமாக உள்ளது.
பின்னா் வீட்டுக் குப்பைகள் கொட்டப்படுவதாலும், கழிவுநீா் ஆற்றில் கலப்பதாலும் ஆறு மாசடைந்து வருகிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் பெரியகுளம் நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வராகநதியை சுத்தம் செய்து, தூய்மையான ஆறாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பெரியகுளத்தைச் சோ்ந்த செ.ரவிச்சந்திரன் கூறியதாவது : வராகநதி பழைமையான சுத்தமான ஆறாக இருந்து வந்தது. ஆனால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா், குப்பைகள் வராகநதியில் கலந்து, ஆறு மாசடைந்து வருகிறது. இதுகுறித்து பல முறை நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பெரியகுளம் நகராட்சி நிா்வாகம் வராகநதியில் கழிவுகள், குப்பைகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

அண்ணா பேருந்து நிலையத்தில் மழைநீா், குப்பைகள் தேக்கம்

பெரியகுளம் வராகநதியில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள்

நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

