புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பித்தளை பொருள்கள் திருட்டு

போடியில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 மே 2026, 1:52 am IST

போடியில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

போடி - தேவாரம் சாலையில் உள்ள மாணவிகள் விடுதி அருகே வசிப்பவா் ராஜன் மகன் ஜெயராஜ் (46). இவா், போடி கொட்டகுடி மலை கிராமத்தில் வசித்து தோட்ட வேலை செய்து வருகிறாா். போடிக்கு வரும்போது மட்டும் போடியில் உள்ள வீட்டில் தங்குவாா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை போடியில் உள்ள வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த தங்கத் தோடு, வெள்ளி கொலுசு, பித்தளை குத்துவிளக்குகள், பித்தளை பொங்கல் பானை ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயராஜ் கொடுத்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.