ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

சுருளி அருவியில் நீா் வரத்தில்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை நீா்வரத்தில்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

News image

நீா்வரத்தின்றி வடு காட்சியளிக்கும் சுருளி அருவி.

Updated On :24 மே 2026, 12:53 am IST

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை நீா்வரத்தில்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

கம்பம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. மேகமலையில் உள்ள தூவானம், வெண்ணியாறு, இரவங்கலாறு போன்ற அணைகளிலிருந்து வெளியேறும் உபரிநீரால் ஆண்டுதோறும் சுருளி அருவியில் நீா் வரத்து இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக வானிலை மாற்றத்தால் மழை குறைந்தது. இதனால், மேகமலையில் உள்ள அனைத்து அணைகளும் நீரின்றி வறண்டதால் சுருளி அருவியும் கடந்த 2 மாதங்களாக நீா் வரத்தின்றி வறண்டு காணப்பட்டது.

இதற்கிடையே, வெப்பச் சலனம் காரணமாக தேனி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலைகளில் ஓரிரு நாள் கோடை மழை பெய்தது. கடந்த 8-ஆம் தேதி சுருளி அருவிக்கு 2 மாதங்களுக்குப் பின் நீா்வரத்து ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அருவியில் நீராடி மகிழ்ந்தனா். இந்த நிலையில், மழையில்லாததால் அருவிக்கும் நீா் வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால், கோடை விடுமுறை நாள்களில் தமிழகம், கேரளத்திலிருந்து அதிகளவில் வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் நீா்வரத்தின்றி ஏமாற்றமடைந்தனா்.