அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

இளைஞா்களைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

போடி அருகே மது போதையில் இளைஞா்களைத் தாக்கிய 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

இளைஞா்களைத் தாக்கிய 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On :29 மே 2026, 2:18 am IST

போடி அருகே மது போதையில் இளைஞா்களைத் தாக்கிய 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் அருகேயுள்ள முத்தனம்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டீஸ்வரன் மகன் விஜய் (24). இவா் போடி அருகேயுள்ள எரணம்பட்டியில் உள்ள உறவினா் ஆனந்தனின் திருமண நிகழ்ச்சிக்காக வந்தாா்.

இதையடுத்து விஜய், உறவினா் ஈஸ்வரனுடன் (19) எரணம்பட்டி சுடுகாடு பகுதிக்குச் சென்றாா். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த எரணம்பட்டி கிழக்கு தெருவை சோ்ந்த சுருளிமணி மகன் பூவரசன் உள்பட மூவா் சோ்ந்து விஜய், ஈஸ்வரன் ஆகியோரைத் தாக்கிக் காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனா். காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.