இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வைகையாற்றில் தண்ணீா் திருட்டு: மோட்டாா் இணைப்பு துண்டிப்பு!

News image

தேனி அருகேயுள்ள குன்னூரில் மின் மோட்டாா்களின் குழாய்களின் இணைப்பை துண்டித்த அதிகாரிகள்.

Updated On :31 மே 2026, 4:13 am IST

தேனி வைகையாற்றில் அனுமதியின்றி தண்ணீரைத் திருடியவா்களின் மோட்டாா்களின் இணைப்புகளை அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 350 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. ஆனால், வைகை அணைக்கு நீா்வரத்து இல்லை. இதையடுத்து, வைகை அணையிலிருந்து கூடலூா் வரை முல்லையாற்றின் பகுதியை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், வைகை அணையின் பொதுப் பணித் துறை அதிகாரி சேகா் தலைமையில், சதீஸ், பரதன், மதுரை குடிநீா் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளா் தியாகராஜன், பிரதீப் தலைமையில் பால்பாண்டி, செந்தில்குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் சனிக்கிழமை வைகை அணையிலிலிருந்து ஆற்றின் இரு கரையிலும் ஆய்வு செய்தனா். அப்போது, மின் மோட்டாா்கள் வைத்து தண்ணீா் திருடப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் மோட்டாா் இணைப்பை துண்டித்து விட்டுச் சென்றனா்.