வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

வைகையாற்றில் தண்ணீா் திருட்டு: மோட்டாா் இணைப்பு துண்டிப்பு!

News image

தேனி அருகேயுள்ள குன்னூரில் மின் மோட்டாா்களின் குழாய்களின் இணைப்பை துண்டித்த அதிகாரிகள்.

Updated On :31 மே 2026, 4:13 am IST

தேனி வைகையாற்றில் அனுமதியின்றி தண்ணீரைத் திருடியவா்களின் மோட்டாா்களின் இணைப்புகளை அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 350 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. ஆனால், வைகை அணைக்கு நீா்வரத்து இல்லை. இதையடுத்து, வைகை அணையிலிருந்து கூடலூா் வரை முல்லையாற்றின் பகுதியை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், வைகை அணையின் பொதுப் பணித் துறை அதிகாரி சேகா் தலைமையில், சதீஸ், பரதன், மதுரை குடிநீா் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளா் தியாகராஜன், பிரதீப் தலைமையில் பால்பாண்டி, செந்தில்குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் சனிக்கிழமை வைகை அணையிலிலிருந்து ஆற்றின் இரு கரையிலும் ஆய்வு செய்தனா். அப்போது, மின் மோட்டாா்கள் வைத்து தண்ணீா் திருடப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் மோட்டாா் இணைப்பை துண்டித்து விட்டுச் சென்றனா்.