பயிற்சியைத் தொடங்கி வைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.அதிகமான் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இப் பயிற்சி பாடதிட்டத்துடன் தொடர்புடைய கருத்துக்கள் மட்டமல்லாது விரிவான பல சிறப்புக் கருத்துக்களையும் உள்ளடக்கி பல்வேறு தலைப்புகளில் அமைந்துள்ளதால் மிகவும் பயனுள்ளதாக அமையும். மாணவர்களின் மனநிலைக் கேற்ப ஆசிரியர்கள் கற்பிக்கவும், மாணவர்களுக்கிடையே ஏற்படும் இடர்களைக் களையவும் இந்தப் பயிற்சி பயனுள்ளதாக அமையும் என்றார்.முன்னதாக கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.செல்வராஜ்குமார் வரவேற்றார். மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் தலைமை ஆசிரியருமான எம்.அர்ச்சுணன் வாழ்த்துரை வழங்கினார்.