பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் கட்டாய கல்வி பயில பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி உயர்கல்விக்கு செல்ல வேண்டும். ஆதரவற்ற பள்ளி வயது குழந்தைகளை உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும். அரசின் கல்வி சலுகைகள் அனைத்தையும் மாணவர்கள் பெற்று பயனடைய பெற்றோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மாற்றுத் திறனுடைய குழந்தைகளை தகுந்த சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.கிராம சபைக் கூட்டங்களில் வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.