அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளிகளில் குடியரசு நாள் விழா

நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியைகள் பாத்திமா ஞானம், ரெங்கலதா, விஜயராணி, சண்முகநாதன் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர்

News image
Updated On :26 ஜனவரி 2013, 9:21 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் குடியரசு நாள் விழாவையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியைகள் பாத்திமா ஞானம், ரெங்கலதா, விஜயராணி, சண்முகநாதன் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.

சுந்தரபாண்டியம்: சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் என்.ஏ.பாலசுப்பிரமணியம் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலசலிங்கம் தேசிய கொடியை ஏற்றினார். ஆசிரியர்கள் செந்தில்குமார், ஜெயக்குமார், ஜே.சுந்தரேசன் மற்றும் கிராம மக்கள் விழாவில் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஜேக்கப் இசை நிகழ்ச்சி நடத்தினார்.

சி.எம்.எஸ்.: ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் குடியரசு நாள் விழா தலைமை ஆசிரியை பி.ஞானலெட் சொர்ணகுமாரி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ சுபேதார் தங்கவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். உதவித் தலைமை ஆசிரியர் ஜான் முத்துராஜ், மாணவர் வசந்தகுமார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உதவித் தலைமை ஆசிரியர் டேவிட் ஞானசேகரன் நன்றி கூறினார்.

மாவட்ட நீதிமன்றம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

வட்டாட்சியர் அலுவலகம்: ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் ஐ.திரௌபதி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

வட்டார வளமையம்: கிருஷ்ணன்கோவிலில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையத்தில் மேற்பார்வையாளர் ராமசுப்பு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்களும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.