சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்கக் கோரிக்கை

நரிக்குடி அருகேயுள்ள ஏ.முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
Updated on
1 min read

நரிக்குடி அருகேயுள்ள ஏ.முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

ஏ.முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பூம்பிடாகை, கல்விமடை, கருவக்குடி, புல்வாய்க்கரை, பிள்ளையார்குளம், அழகாபுரி, நேர்த்தியாயிருப்பு உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினமும் வெளி நோயாளிகளாக 200 பேர் வரை வருகின்றனர். உள்நோயாளிகளாக 10 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது ஒரு மருத்துவர் மட்டுமே பணிபுரிகிறார். அதிகமானோர் ஒரே நேரத்தில் வருவதால் அவர் சிகிச்சை அளிக்க சிரமப்பட வேண்டியுள்ளது. இரவில் தற்கொலை முயற்சி, விபத்துகள், பெண்களுக்கு பிரசவ வலி சமயங்களில் சிகிச்சை அளிக்க இயலவில்லை.

இரவில் மருத்துவர்கள் இல்லை. இதனால் நோயாளிகள் அருகில் உள்ள நகரங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

எனவே இங்கு கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து அவர்கள் இரவிலும் தங்கிப் பணிபுரிய வசதி செய்துதர வேண்டும் என சுற்றுப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com