அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நூறு நாள் வேலை வழங்கக் கோரி வெள்ளூர் கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

விருதுநகர் அருகே வெள்ளூரில் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி, அக்கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:35 pm

DIN

விருதுநகர் அருகே வெள்ளூரில் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி, அக்கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
     வெள்ளூர் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், 100-க்கும் மேற்பட்டோர் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிய பதிவு செய்துள்ளனர்.
     இந்நிலையில், 2018 ஏப்ரல் மாதம் முதல் இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்களுக்கு பணி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கிராம சபைக் கூட்டத்தில் ஓராண்டுக்கான பணியாளர்கள் குறைந்த அளவிலேயே தேர்வு செய்துள்ளனராம். அதை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பும் பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
    இதையறிந்த வெள்ளூர் கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகை யிட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு, விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாதர் சங்க மாநிலச் செயலர் லெட்சுமி மற்றும் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.