திருத்தங்கலில் அரசு பெண்கள் பள்ளி சுற்றுச்சுவர் சேதம்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடியும் நிலையில் உள்ள சுற்றுச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடியும் நிலையில் உள்ள சுற்றுச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருத்தங்கலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1100 மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் மிகவும் பழுதாகியுள்ளது.
தற்போது மழை பெய்து வருவதால் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த சுவரை சீரமைக்க வேண்டும் என
அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
ஆனால் சுவரை சீரமைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். பள்ளி மாணவிகளின் நலன் கருதி இந்த சுற்றுச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com