மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ராஜபாளையம் ஆறாவது மைல் அணையின் நீர்மட்டம் 12.5 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் கோடையில் ஏற்பட்ட குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம் அருகே ராஜாம்பாறை, முள்ளிக்கடவு, வழுக்கு பாறை மற்றும் மலட்டாறு போன்ற பகுதிகளில் பெய்த மழையால் அய்யனார்கோவில் ஆற்றில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ராஜபாளையம் ஆறாவது மைல் நீர்தேக்கத்தின் நீர்மட்டம் 12.5 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் ஆற்றில் தொடர்ந்து நீர் வரத்து உள்ளது. இதே நிலை நீடித்தால் நீர்தேக்கத்தின் முழுக்கொள்ளளவான 20 அடியை எட்ட வாய்ப்புள்ளது.
நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், நடப்பாண்டில் கோடைகாலத்தில் ராஜபாளையம் நகராட்சி குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகளிலும் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆறாவது மைல் நீர்தேக்கம் நிரம்பி வருவதால், 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்

டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக மக்களின் விருப்பங்களைப் பிரதிபலித்த தேர்தல்: முதல்வர் விஜய்க்கு மமதா வாழ்த்து!

லக்னௌவை வீழ்த்தி சிஎஸ்கே அபாரம்; புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேற்றம்!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
