விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி ஆசிரியை திட்டியதால், 5 மாணவிகள் விஷ விதை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் சத்தியபிரியா, அபிநயா, வைகுண்ட வாசுகி, முத்துக்கலா, கண்ணகி. வேறு வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறுவதால், 9 ம் வகுப்புக்கு செவ்வாய்கிழமை தேர்வு கிடையாதாம்.
இந்நிலையில் 5 மாணவிகளும் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளனர். இதனால் ஆங்கில ஆசிரியை ஆனந்தி ஜெபா கிறிஸ்டின், மாணவிகளை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவிகள் அரளி விதைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனையறிந்த ஆசிரியர்கள் உடனே மாணவிகளை மீட்டு, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாம்பியன்ஸ் லீக்கை மீண்டும் வென்றது பிஎஸ்ஜி..! பெனால்டி வாய்ப்பில் த்ரில் வெற்றி!

கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் தாக்கப்பட்ட அபிஷேக் பானர்ஜி: பாஜக

மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்!
டொனால்ட் டிரம்ப் உடல் எடையைக் குறைக்க மருத்துவ அறிவுரை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


