10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ஸ்ரீவிலி. அருகே ஆசிரியை திட்டியதால் 5 மாணவிகள் தற்கொலை முயற்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  பள்ளி ஆசிரியை திட்டியதால், 5 மாணவிகள் விஷ விதை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:34 am IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  பள்ளி ஆசிரியை திட்டியதால், 5 மாணவிகள் விஷ விதை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் சத்தியபிரியா, அபிநயா, வைகுண்ட வாசுகி, முத்துக்கலா, கண்ணகி.  வேறு வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறுவதால்,  9 ம் வகுப்புக்கு  செவ்வாய்கிழமை தேர்வு கிடையாதாம். 
இந்நிலையில் 5 மாணவிகளும் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளனர். இதனால் ஆங்கில ஆசிரியை ஆனந்தி ஜெபா கிறிஸ்டின், மாணவிகளை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவிகள் அரளி விதைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.  இதனையறிந்த ஆசிரியர்கள் உடனே மாணவிகளை மீட்டு, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.