மிளகாய் விலை சரிவால் விவசாயிகள் கவலை

ராஜபாளையம் பகுதியில் மிளகாய் விளைச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Updated on
1 min read

ராஜபாளையம் பகுதியில் மிளகாய் விளைச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர், எஸ்.ராமலிங்காபுரம், நல்லமநாயக்கன்பட்டி, வெங்காநல்லூர், மொட்டமலை, சத்திரப்பட்டி, குறிச்சியார்பட்டி, சுந்தரராஜபுரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் அதிகளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பல்வேறு மாவட்டங்களில் மிளகாய் விளைச்சல் அதிகரித்ததுடன் வரத்தும் பெருகியுள்ளது.இதனால் விலை சரியத் துவங்கியது. 
 இந்நிலையில் ராஜபாளையம் பகுதியில் மிளகாய் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. கிலோ ரூ. 6 முதல் விலை உள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
மிளகாய் பறிப்பு கூலி, சந்தைக்கு கொண்டு செல்ல கூலிக்கு கூட விலை கிடைக்கவில்லை. இதே நிலை நீடித்தால் செடியிலே பழுக்க விட வேண்டியது தான் என மிளகாய் சாகுபடி விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com