ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காந்தி நகர் மேம்பாலம் அருகே விபத்து எச்சரிக்கை பலகை அமைக்க வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காந்தி நகர் மேம்பாலம் அருகே அடிக்கடி ஏற்படும் விபத்துகளைத் தடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :14 மே 2018, 7:05 pm

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காந்தி நகர் மேம்பாலம் அருகே அடிக்கடி ஏற்படும் விபத்துகளைத் தடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் காந்தி நகர் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மேம்பாலத்திற்கும் அதனையடுத்துள்ள ரயில்வே மேம்பாலத்திற்கும் இடைப்பட்ட சுமார் 400 மீட்டர் நீளச் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.
பாலத்தின் அணுகுச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலைக்குச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் உரிய போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் சாலையைக் குறுக்காகக் கடக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகவே இருச்சக்கர வாகன ஓட்டிகளுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் விபத்துக்களைத் தவிர்க்க இப்பகுதியில் விபத்துப் பகுதி எனும் எச்சரிக்கைப் பலகை அமைக்க வேண்டும். அபாய எச்சரிக்கை ஒளிர்விளக்குக் கம்பங்களையும் அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.