அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலாஉளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் தர்னா

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி

Updated On :13 பிப்ரவரி 2019, 8:25 am IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், அச்சம்தவிர்த்தான் ஊராட்சி, வடக்கு அச்சம்தவிர்த்தான் கிராமத்திற்கு தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி அலுவலர்களுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனையடுத்து ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊர் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு  தர்னா போராட்டம் நடத்தினர்.  இதனைத் தொடர்ந்து ஊராட்சி அலுவலகத்தில் பொறியாளர்கள் பாலகிருஷ்ணன், மாடசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
   இதில் கிராமத் தலைவர்கள் சின்னதுரை, கருத்தபாண்டி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  இதில் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.