குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

அருப்புக்கோட்டையில் புதிய சாலை அமைக்கக் கோரிக்கை

அருப்புக்கோட்டை நகரில் பள்ளிகளை இணைக்கும் பிரதானச் சாலையை சீரமைக்க சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Updated On :25 பிப்ரவரி 2019, 7:27 am IST

அருப்புக்கோட்டை நகரில் பள்ளிகளை இணைக்கும் பிரதானச் சாலையை சீரமைக்க சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அருப்புக்கோட்டையிலுள்ள வர்த்தகர் சங்கச் சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு  அமைக்கப்பட்டது. தற்போது, இந்த சிமென்ட் சாலை உரிய பராமரிப்பின்றி சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையில் 2 மேல்நிலைப் பள்ளிகள், ஒரு தொடக்கப் பள்ளி, ஒரு நடுநிலைப் பள்ளி மற்றும் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகின்றன. இதனால், இச்சாலையில் சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவியர் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும், இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்களும் விபத்தை சந்திக்கின்றனர். எனவே, குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையை புதிதாக அமைக்க வேண்டும் எனசமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.