டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

ஓய்வு பெற்ற  காவல் ஆய்வாளருக்கு பிடியாணை

விருதுநகர் நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணையில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்த ஓய்வு பெற்ற

Updated On :23 ஜனவரி 2019, 7:44 am IST

விருதுநகர் நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணையில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
   விருதுநகர் அருகே உள்ள நந்திரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராமு (58). இவரது மனைவி செல்லம்மாள்(52), மகன் ஜெய்கணேஷ் (24). ராமு, மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்ததாராம். இந்நிலையில் ராமு கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மனைவி மற்றும் மகனைக் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, விருதுநகரில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 
   இதில், விசாரணை அதிகாரியான ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ராமராஜ், பலமுறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி எஸ்.டி.பரிமளா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.