திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  டி.மீனாட்சிபுரம் கிராமத்தின்

Updated On :23 ஜனவரி 2019, 7:41 am IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  டி.மீனாட்சிபுரம் கிராமத்தின் எல்லைப் பகுதியிலிருந்து கிராமத்தை நோக்கிச் செல்லும் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளச் சாலையானது ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு மிகக்குறுகலாக உள்ளது. அருகிலுள்ள திருவிருந்தாள்புரம் மற்றும் சுக்கில நத்தம் ஆகிய இருவேறு திசைகளிலுள்ள கிராமங்களிலிருந்து இக்கிராமத்தை இணைக்கும் இரண்டு சாலைகளுமே இவ்விதம் மிகக்குறுகலானதாக இருப்பதால் இக்கிராமத்திற்குப் பேருந்து  உள்ளிட்ட  பிற நான்கு சக்கர கனரக வாகனங்களின் போக்குவரத்தும்  கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையறிந்து  இச்சாலையை அகலப்படுத்த இக்கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தபோதும்  ஊராட்சித் தரப்பு மெத்தனம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே திருவிருந்தாள்புரம்-டி.மீனாட்சிபுரம்-சுக்கிலநத்தம் ஆகிய கிராமங்களை இணைக்கும் சாலையை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.