ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் கனரா வங்கி முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் கனரா வங்கி முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மருத்துவ கல்லூரியில் அகில இந்திய இட ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகரச் செயலாளர் பிரபு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயபாரத் வைத்தார். ஒன்றிய செயலாளர் லெனின் ஈஸ்வரன் மற்றும் சிபிஎம் ஒன்றிய செயலாளர் சசிகுமார், சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...