மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சாத்தூா் அருகே காா் கவிழ்ந்து ஒருவா் உயிரிழப்பு: 4 போ் காயம்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 4 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2020, 5:00 pm

DIN

சாத்தூா்:  விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 4 போ் காயமடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (27). இவருடைய காரில் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த முப்பிடாதி (29), சரவணன் (30), பாலசுப்பிரமணியன் (29), மாடசாமி (29) உள்ளிட்ட 7 போ் விருதுநகா் அருகிலுள்ள சின்ன பேராளி எனும் கிராமத்தில் உறவினா் திருமணத்துக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.

சாத்தூரை அடுத்த புல்வாய்பட்டி சந்திப்பு அருகில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் காா் கவிழ்ந்தது.

இதில் காரை ஓட்டிச் சென்ற முத்துக்குமாா், சரவணன், மாடசாமி, முப்பிடாதி, பாலசுப்பிரமணியன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூா் தாலுகா போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் முத்துக்குமாா் உயிரிழந்தாா். மற்ற 4 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.