மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கோவிலாங்குளம் பெரியகண்மாயின் கால்வாயைத் தூர்வார வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை, கோவிலாங்குளம் கிராமத்தில் நிலத்தடி நீராதாரமாக உள்ள பெரியகண்மாயின் நீர்வரத்துக்கால்வாயைப் புதர்ச்செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் கால்வாயைத் தூர்வார கோரிக்கை எழுந்துள்ளது.

News image
கோவிலாங்குளம் பெரிய கண்மாய்க்கு வரும் நீர்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்துள்ள புதர்ச்செடிகள்  
Updated On :28 ஆகஸ்ட் 2020, 11:59 am

DIN

அருப்புக்கோட்டை, கோவிலாங்குளம் கிராமத்தில் நிலத்தடி நீராதாரமாக உள்ள பெரியகண்மாயின்  கால்வாயைப் புதர்ச் செடிகள் ஆக்கிரமித்துள்ளதால், அதனைத் தூர்வார கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டையை அடுத்த கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள பெரியகண்மாய்க்கு பல நீர்வரத்துக் கால்வாய்கள் உள்ளன. அவற்றில் அக்கிராமத்திலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையோரம் அளவில் பெரிய நீர்வரத்துக் கால்வாய் உள்ளது.இக்கால்வாயில் சிறிய தடுப்பணை அமைத்து நீரைத்தேக்கி அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

மழை அதிகம் பெய்தால் இக்கால்வாய் நிரம்பி மறுகால் பாயும் நீரானது பெரியகண்மாய்க்குச் செல்லும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.இதனால் இந்த வரத்துக் கால்வாயானது ஒரே நேரத்தில் விவசாயிகளுக்கும் பயன்படுகிறது.அதேவேளையில் இக்கால்வாயிலிருந்து கண்மாய்க்கும் நீர் செல்வதால் நிலத்தடி நீராதாரத்திற்கும் பெரும் துணையாக இருக்கிறது.

இதனிடையே இவ்வரத்துக் கால்வாயிலும் அதிலிருந்து பெரிய கண்மாய்க்கு நீர் செல்லும் பாதையிலும் பெருமளவில் புதர்ச்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இவை பெரிய கண்மாய்க்குச் செல்லும் நீர்வரத்தைத் தடுத்துவிடுவதால்,இப்பகுதி குடியிருப்புகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

சாதாரணமாக 50 முதல் 80 அடி ஆழத்திலேயே ஆழ்துளைக்கிணற்றில் முன்பெல்லாம் நிலத்தடிநீர் கிடைக்கும்.தற்போது சுமார் 180 முதல் 200 அடி ஆழம்வரை நிலத்தடி நீர்மட்டம் சென்றுவிட்டதாக இப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆகவே நிலத்தடி நீராதாரமாக விளங்கும் பெரியகண்மாய்க்கான பிரதான நீர்வரத்துக் கால்வாயை விரைவில் தூர்வாற வேண்டுமென குடியிருப்புவாசிகளும்,விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.