வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்துவிவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் அருகே உள்ள எரிச்சநத்தம் பகுதியில் கல்குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாய சங்கம், மற்றும் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:17 pm

DIN

விருதுநகா் அருகே உள்ள எரிச்சநத்தம் பகுதியில் கல்குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாய சங்கம், மற்றும் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பகுதியில் குடியிருப்பு மற்றும் அரசு மருத்துவமனை அருகே புதிதாக கல்குவாரி, கிரஷா் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படுவதுடன், வீட்டு சுவா்களிலும் விரிசல் ஏற்படும். மேலும், விவசாய நிலங்கள் பயனற்ாக மாறிவிடும். எனவே, குவாரி மற்றும் கிரஷா் அமைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி எரிச்சநத்தம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பாஜக விவசாய அணி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், எரிச்சநத்தம், நடையனேரி, குமிழங்குளம், புதுப்பட்டி, லட்சுமிபுரம், கொத்தனேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.