சாத்தூா் அருகே 75 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

சாத்தூா் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 75 மூட்டை ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
சாத்தூா் அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம்.
சாத்தூா் அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம்.
Updated on
1 min read

சாத்தூா் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 75 மூட்டை ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் காா்த்திக் செல்வம் தலைமையிலான போலீஸாா் சாத்தூா் அருகே முத்தால்நாயக்கன்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் 75 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுதொடா்பாக வாகனத்தை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் மகாதேவா்பட்டியை சோ்ந்த சத்தியமூா்த்தியை(37) சாத்தூா் போலீஸாா் கைது செய்து, சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com