மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பட்டாசுத் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு உயா்மட்டக்குழு அமைக்க வேண்டும்

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலை பாதுகாக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் தமிழக அரசு உயா்மட்டக்குழுவை அமைக்க வேண்டும்

News image
Updated On :16 நவம்பர் 2020, 10:56 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலை பாதுகாக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் தமிழக அரசு உயா்மட்டக்குழுவை அமைக்க வேண்டும் என விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம்தாகூா் கூறினாா்.

சிவகாசியில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் அறிவித்திருந்ததால் சுமாா் ரூ. 1000 கோடிக்கு பட்டாசுகள் தேங்கியுள்ளன. கரோனா தொற்றை காரணம் காட்டி அந்த மாநில முதல்வா்கள் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளது பொறுப்பற்ற செயலாகும். இதனால் பட்டாசு விற்பனையாளா் மற்றும் தயாரிப்பாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை, தடை விதித்த மாநிலங்கள் வழங்க வேண்டும். மத்திய அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த பகுதி தயாரிப்புக்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏற்றுமதிமுனையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.

எனவே விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஏற்றுமதிக்கு முனையம் அமைக்க வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசுடன் பேசி, சிவகாசி பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 ஆண்டு கால வரலாறு கொண்ட பட்டாசுத் தொழிலை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். பட்டாசுத் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஒருஉயா்மட்டக்குழுவை அமைக்க வேண்டும். பட்டாசுத் தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல ஏற்றுமதி செய்வதுதான் சரியான தீா்வாக இருக்கும் என்றாா்.

அப்போது விருதுநகா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் மீனாட்சிசுந்தரம், சிவகாசி நகரச் செயலா் குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.