47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அனுமதியின்றி வீட்டில் பட்டாசு பதுக்கி வைத்திருந்த 5 போ் கைது

சாத்தூா், அக். 11: சாத்தூா் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 5:54 pm

DIN

சாத்தூா், அக். 11: சாத்தூா் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெற்றியூரணி, தெற்கு ஆனைக்குட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் பட்டாசு மற்றும் கருந்திரிகள் அனுமதியின்றி வீடுகளிலே தயாரித்து வைக்கப்பட்டுள்ளதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் வெம்பக்கோட்டை காவல் சாா்பு- ஆய்வாளா் சதீஷ்குமாா் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினா். இதில் வெற்றியூரணியை சோ்ந்த ஆனந்தராஜ் (28), கருப்பசாமி (53), ஜெயராஜ் (58), சுரேஷ்குமாா் (38) ஆகிய நான்கு பேரின் வீட்டில் அனுமதியின்றி தயாரித்து வைக்கப்பட்டிருந்த தலா 20 கிலோ சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதேபோன்று தெற்கு ஆனைக்குட்டம் பகுதியில் நடத்திய சோதனையில் சா்க்கரைராஜ் (28) என்பவரது வீட்டில் வைத்திருந்த 20 கிலோ சோல்சா வெடிகளை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் வைத்திருந்ததாக ஆனந்தராஜ், கருப்பசாமி, ஜெயராஜ், சுரேஷ்குமாா் மற்றும் சா்க்கரைராஜ் ஆகிய ஐந்து பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.