47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்

கே.மீனாட்சிபுரம் கிராமத்தில் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் மற்றும் தானம் அறக்கட்டளையினர் இணைந்து நடத்திய மரக்கன்று நடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
அருப்புக்கோட்டை அருகே கே.மீனாட்சிபுரம் கிராமத்தில் நேரில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திய வேளாண்மைக் கல்லூரி மாணவிகள்.
Updated On :21 ஏப்ரல் 2021, 1:46 pm

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கே.மீனாட்சிபுரம் கிராமத்தில் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் மற்றும் தானம் அறக்கட்டளையினர் இணைந்து நடத்திய மரக்கன்று நடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீனிவாசன், நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி மரங்களின் முக்கியத்துவம் குறித்து கே.மீனாட்சிபுரம் கிராமத்தினரிடையே எடுத்துரைத்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.

வேளாண்மை உதவிப்பேராசிரியர் வேணுதேவன், தானம் அறக்கட்டளை மற்றும் திருச்சுழி வட்டார கண்மாய் வயலக கூட்டமைப்பினர் முன்னிலை வகித்தனர். அப்போது மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய  4ஆம் ஆண்டு மாணவிகளான கார்த்திகா, கெüசல்யா, லட்சுமி, மகாலட்சுமி, நந்தினி மற்றும் நஸ்ரத் ஆகியோர் நேரில் களத்தில் மரங்களை நட்டதுடன், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 25க்கு மேற்பட்ட முன்னோடி பெண் விவசாயிகளிடையே மரங்களின் பயன்கள் குறித்து எடுத்துக் கூறி புங்கை மரம், நாவல் மரம், அரச மரம் உள்ளிட்ட பலவகை மரங்களை நடுவதன் மூலம் மண் அரிப்பைத் தடுத்து மண்வளம் காப்பதன் மூலம் நிழலும், மழையும் பெறலாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியின்போது க.மீனாட்சிபுரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.