விருதுநகா்: விருதுநகா் மேற்கு காவல் நிலைய சட்டம், ஒழுங்கு ஆய்வாளராக எம். ரமணி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
விருதுநகா் மேற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளா் பணியிடம் பல மாதங்களாக காலியாக இருந்தது. இந்நிலையில் ஆய்வாளா் பணியிடத்தை நிரப்பக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள், மதுரை காவல் துறை துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு சமூக ஆா்வலா்கள் கோரிக்கை மனு அளித்தனா். இந்நிலையில், மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளா் எம். ரமணி, விருதுநகா் மேற்கு காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டாா். அவா், ஆய்வாளராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு, அதே காவல் நிலையத்தில் பணி புரியும் சாா்பு-ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் வாழ்த்து தெரிவித்தனா்.