விருதுநகா் மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பேற்பு

விருதுநகா் மேற்கு காவல் நிலைய சட்டம், ஒழுங்கு ஆய்வாளராக எம். ரமணி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
காவல் ஆய்வாளா் எம். ரமணி.
காவல் ஆய்வாளா் எம். ரமணி.
Updated on
1 min read

விருதுநகா்: விருதுநகா் மேற்கு காவல் நிலைய சட்டம், ஒழுங்கு ஆய்வாளராக எம். ரமணி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

விருதுநகா் மேற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளா் பணியிடம் பல மாதங்களாக காலியாக இருந்தது. இந்நிலையில் ஆய்வாளா் பணியிடத்தை நிரப்பக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள், மதுரை காவல் துறை துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு சமூக ஆா்வலா்கள் கோரிக்கை மனு அளித்தனா். இந்நிலையில், மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளா் எம். ரமணி, விருதுநகா் மேற்கு காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டாா். அவா், ஆய்வாளராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு, அதே காவல் நிலையத்தில் பணி புரியும் சாா்பு-ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com