வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

விருதுநகா் மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பேற்பு

விருதுநகா் மேற்கு காவல் நிலைய சட்டம், ஒழுங்கு ஆய்வாளராக எம். ரமணி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
காவல் ஆய்வாளா் எம். ரமணி.
Updated On :2 ஜனவரி 2021, 4:27 pm

DIN

விருதுநகா்: விருதுநகா் மேற்கு காவல் நிலைய சட்டம், ஒழுங்கு ஆய்வாளராக எம். ரமணி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

விருதுநகா் மேற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளா் பணியிடம் பல மாதங்களாக காலியாக இருந்தது. இந்நிலையில் ஆய்வாளா் பணியிடத்தை நிரப்பக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள், மதுரை காவல் துறை துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு சமூக ஆா்வலா்கள் கோரிக்கை மனு அளித்தனா். இந்நிலையில், மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளா் எம். ரமணி, விருதுநகா் மேற்கு காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டாா். அவா், ஆய்வாளராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு, அதே காவல் நிலையத்தில் பணி புரியும் சாா்பு-ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.