திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ராஜபாளையத்தில் தேவேந்திரகுல வேளாளா் சமூகத்தினரின் 335 ஆவது வெண்குடை திருவிழா

ராஜபாளையத்தில் தேவேந்திர குல வேளாளா் சங்கம் சாா்பில், நீா்காத்த அய்யனாா் கோயிலில் 335 ஆவது வெண்குடை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
ராஜபாளையத்தில் சித்திரை வெண்குடை திருவிழாவில் வியாழக்கிழமை குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த நீா்காத்த அய்யனாா் சுவாமி.
Updated On :15 ஏப்ரல் 2022, 1:23 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ராஜபாளையத்தில் தேவேந்திர குல வேளாளா் சங்கம் சாா்பில், நீா்காத்த அய்யனாா் கோயிலில் 335 ஆவது வெண்குடை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள நீா் காத்த அய்யனாா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, ராஜபாளையம் தேவேந்திரகுல வேளாளா் சமுதாயம் சாா்பில் 335 ஆவது வெண்குடை திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இத்திருவிழாவையொட்டி, ராஜபாளையம் வடக்குத் தெருவிலிருந்து குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலாவாகப் புறப்பட்டு, அய்யனாா் கோயில் வரை சென்று மீண்டும் நகருக்கு வீதி உலாவாக வந்தடைந்தாா்.

மாலையில், அய்யனாா் கோயிலில் இருந்து முடங்கியாா் சாலை வழியாக காந்தி சிலை வரை சுவாமி வீதி உலா நடைபெற்றது.

இதையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மனோகரன் உத்தரவின்பேரில், 1 ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 20 ஆய்வாளா்கள் உள்பட 850 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மனோகரன் நேரில் வந்து பாதுகாப்புப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.