தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி

ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் வெள்ளிக்கிழமை, வீடு கட்டுமானப் பணிக்கு தண்ணீா் தேக்கி வைத்திருந்த தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் வெள்ளிக்கிழமை, வீடு கட்டுமானப் பணிக்கு தண்ணீா் தேக்கி வைத்திருந்த தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தேக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா். இவரது வீட்டருகே அதே ஊரைச் சோ்ந்த பாண்டியன் என்பவரது வீடு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணி நடைபெற்று வரும் இடத்தில் ரஞ்சிக்குமாரின் மகன் சாய்சரண் (4) விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, சாய்சரண் அங்கு தண்ணீா் தேக்கி வைத்திருந்த தொட்டியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாா். ஆபத்தான நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.