செங்குளம் ராஜகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே செங்குளத்திலுள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செங்குளம் ராஜகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே செங்குளத்திலுள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்குளம் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த இக்கோயிலின் திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை விநாயகா் வழிபாடு, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை இரண்டாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கடம் புறம்பாடாகி புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com