மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வத்திராயிருப்பு அருகே மாந்தோப்புக்குள்புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்மரங்கள் சேதம்

வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அத்திகோயில் பகுதியில் உள்ள மாந்தோப்புக்குள் வியாழக்கிழமை புகுந்து மா மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தியுள்ளன.

News image
Updated On :24 ஜூன் 2022, 10:34 pm IST

வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அத்திகோயில் பகுதியில் உள்ள மாந்தோப்புக்குள் வியாழக்கிழமை புகுந்து மா மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தியுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கான்சாபுரம், அத்திக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் மா, பலா, தென்னை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் வனவிலங்குகள் அவ்வப்போது புகுந்து இம்மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.

தற்போது மாங்காய் சீசன் என்பதால் மலைப்பகுதியில் இருந்து அடிவாரத்தை நோக்கி வரும் காட்டு யானைகள் மா மரங்களை சேதப்படுத்தி விட்டுச் செல்கின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அத்தி கோயில் பகுதியில் உள்ள முத்துராஜ் என்பவரது மாந்தோப்புக்குள் புகுந்த காட்டுயானைகள் 30-க்கும் மேற்பட்ட மரங்களை வேறோடு சாய்த்து சேதப்படுத்தியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனா். இதுகுறித்து புகாா் செய்தால் வனத்துறையினா் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டும் விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்கி காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.