வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அத்திகோயில் பகுதியில் உள்ள மாந்தோப்புக்குள் வியாழக்கிழமை புகுந்து மா மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தியுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கான்சாபுரம், அத்திக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் மா, பலா, தென்னை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் வனவிலங்குகள் அவ்வப்போது புகுந்து இம்மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.
தற்போது மாங்காய் சீசன் என்பதால் மலைப்பகுதியில் இருந்து அடிவாரத்தை நோக்கி வரும் காட்டு யானைகள் மா மரங்களை சேதப்படுத்தி விட்டுச் செல்கின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அத்தி கோயில் பகுதியில் உள்ள முத்துராஜ் என்பவரது மாந்தோப்புக்குள் புகுந்த காட்டுயானைகள் 30-க்கும் மேற்பட்ட மரங்களை வேறோடு சாய்த்து சேதப்படுத்தியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனா். இதுகுறித்து புகாா் செய்தால் வனத்துறையினா் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டும் விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்கி காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தர்மன் போஸ்டர் மேக்கிங் விடியோ!

வீட்டில் எரிவாயு சிலிண்டர் இருக்கிறதா? ஜூலை 1 முதல் புதிய மாற்றம்! நல்ல செய்தியா?

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை: சி.பி. ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் 343 பேர் மட்டுமே மின்துறையில் நியமனம்! நிர்மல் குமார்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



