/

விருதுநகரில் சிஐடியுஆா்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூன் 2022, 5:20 pm

DIN

விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளா், ஓஎச்டி ஆப்பரேட்டா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்டத் தலைவா் திருமலை தலைமை வகித்தாா். அதில் கிராம ஊராட்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆப்பரேட்டா்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.1,400 ஊதிய உயா்வை அமல்படுத்த வேண்டும். பணி ஓய்வு பெற்றவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை குறித்த மனு வழங்கப்பட்டது. இதில், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினா் பி.என். தேவா, மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.