சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

த்ரிஷா கொடுத்த டிராமிசு கேக் ஹைதராபாத்-ல் மட்டும் கிடைக்குமா? என்ன ஸ்பெஷல்?

நடிகை த்ரிஷா, முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளில் கொடுத்த டிராமிசு கேக் ஹைதராபாத்-ல் மட்டுமே கிடைக்கும் என்று தகவல்..

News image
Updated On :25 ஜூன் 2026, 6:02 pm IST

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் முடிந்து மூன்று நாள்கள் ஆகப்போகிறது. ஆனாலும் அந்த ஒற்றைப் புகைப்படம் சமூக வலைத்தளத்தையே ஆட்டிவைக்கிறது.

முதல்வர் விஜய்க்கு, த்ரிஷா பரிசளித்த கேக் வகைகளில், மிகவும் சிறப்பானதாக இருப்பது ஒன்றுபோல வைக்கப்பட்டிருந்த மூன்று கோன்சு டிராமிசு வகை கேக்குகள்தான்.

த்ரிஷா பகிர்ந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கேக்குகளை உணவுப் பிரியர்கள் பலரும் கூகுளில் தேடிக் கண்டுபிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதில், மூன்று சிறிய கேக்குகள் அனைத்தும் டிராமிசு வகையைச் சேர்ந்தவை. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட 'கான்சு' கேக் கடையின் பிரத்யேகமான தயாரிப்பு என்பதையும் கண்டறிந்துவிட்டனர்.

விமானத்தில் வந்திருக்குமா?

ஹைதராபாத்திலிருந்து அந்த கேக்குகள் எப்படி சென்னை வந்தன என்றும் அடுத்தடுத்த கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு இப்போது நம்மிடம் விடையில்லை.

டிராமிசு (Tiramisu) வகை கேக்குகளுடன், உண்மையான மாம்பழத்தின் கூழ் மற்றும் துண்டுகளைக் கொண்டு செய்யப்படும் மாம்பழ வெண்ணிலா கேக் சென்னையைச் சேர்ந்த கடையிலிருந்தும், ஸ்ட்ராபெரி ஒயிட் சாக்லேட் கேக் சென்னையில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற கேக் நிறுவனத்திடமிருந்தும் வாங்கியிக்கிறார்.

த்ரிஷா வெளியிட்ட இந்தப் புகைப்படத்தால் இதில் சம்பந்தப்பட்ட கேக் நிறுவனங்களுக்கு அதிக கேக் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றனவாம். அதுவும் பெரும்பாலும் த்ரிஷா கொடுத்த அதே கேக்குகள்தான் நாள்தோறும் கிட்டத்தட்ட 50 வரை விற்பனையாகிறதாம்.

ஹைதராபாத்திலும் கேக் தீ!

ஜூலை 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படத்தைப் பகிர, ஹைதராபாத்தில் உள்ள அந்த சம்பந்தப்பட்ட கடைக்கு ஒரு சில நிமிடங்களில் எல்லாம் இந்த டிராமசு கேக் கேட்டு ஆன்லைனில் ஆர்டர்கள் குவியத் தொடங்கிவிட்டதாம்.

சென்னையிலிருப்பவர்களுக்குத்தான் இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் ஹைதராபாத்தில் இருப்பவர்களுக்கு இந்தக் கடை பற்றியும் கேக் பற்றியும் தெரிந்திருக்கும் அல்லவா?

ஆர்டர்கள் குவிவதைப் பார்த்தப் பிறகுதான் அவர்களுக்கு, முதல் டிராமசு கேக் ஆர்டர் கொடுக்கப்பட்டது நடிகை த்ரிஷாவால், அது முதல்வர் விஜய்காக வாங்கப்பட்டது என்பதே தெரியுமாம்.

சரி இரண்டு, மூன்று நாள்கள் ஆகிவிட்டதே, ஆர்டர்கள் வருவது குறைந்திருக்கிறதா? என்றால் இல்லையாம். அன்று முதல் அனைத்து ஊழியர்களும் நிக்க நேரமின்றி கேக் தயாரித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

அதுவும் வார இறுதி நாள்களில் அதிகம் தேவைப்படும் என்பதால் இப்போதே அதற்கும் தயாராகி வருகிறார்களாம்.

ஏற்கனவே இந்த நிறுவனத்தின் கிளைகள் பெங்களூரு மற்றும் மும்பையிலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறதாம். விரைவில் சென்னையிலும் தொடங்கவிருக்கிறார்களாம்.

Summary

Is the Tiramisu cake Trisha gave available only in Hyderabad? What makes it special?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.