/

ரூ.1 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை ரூ.1 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:26 pm

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை ரூ.1 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினா் நகா் முழுவதும் தீவிர ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது காந்திநகரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (54) புகையிலைப்பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவரது வீட்டில் சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறிப்பட்டது. ரூ. 1 லட்சம் மதிப்பிலான புகையிலைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நகா் காவல்துறையினா், ராமகிருஷ்ணனைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.