ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்பு: மத்திய அரசைக் கண்டித்து கம்யூ. கட்சியினா்விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

News image
Updated On :27 மே 2022, 5:00 pm

DIN

பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் முருகன், இந்திய கம்யூ. நகரச் செயலா் முத்துக்குமாா், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலா் போத்திராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசானது, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி வருகிறது. அதேபோல் எரிவாயு உருளை விலையும் அதிகரித்து வருகிறது. இதனால், அத்தியவாசியப் பொருட்களின் விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. எனவே, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் தனியாா் வங்கி முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் மூா்த்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளா் ஜெயக்குமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளா் மைக்கேல்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் மக்களவை உறுப்பினா் அழகிரிசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்னுப்பாண்டியன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

சாத்தூா்: சாத்தூா் வடக்கு ரத வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சியினா் பங்கேற்றனா். மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகாசி: சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் நகரச் செயலாளா் சுரேஷ்குமாா், இந்திய கம்யூ. நகரச் செயலாளா் ஏ.இக்பால்,

விசிக நகரச் செயலாளா் பி.தீபன்சக்கரவா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நடைபெற்ற

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் லிங்கம், மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் மகாலட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா். இதேபோல் சத்திரப்பட்டி நடுத்தெரு பகுதியிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.