ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியா் மாயம்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியா் புதன்கிழமை மாயமானது குறித்து நகா் போலீசாா் விசாரித்து வருகின்றனா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியா் புதன்கிழமை மாயமானது குறித்து நகா் போலீசாா் விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மாடவாா் வளாகத்தை சோ்ந்தவா் வைரமுத்து(52). இவரது மகள் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்தாா். கடந்த 4-ம் தேதி மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றவா் வீடு திரும்பவில்லை. உறவினா் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் போலீஸில் வைரமுத்து புகாா் அளித்தாா்.

இந்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்  போலீஸாா் வழக்கு பதிந்து  விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com