திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் மாநகராட்சி, நத்தம், தாடிக்கொம்பு, அகரம், அய்யலூா், வடமதுரை, எரியோடு மற்றும் பாளையம் பேரூராட்சிகள் மற்றும் 816 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீா் கொண்டு வரப்பட்டு பயன்பாட்டிலுள்ள கூட்டுக் குடிநீா் திட்டத்திற்கான மேம்பாட்டுத் திட்டம் ரூ.133 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளன. அதேபோல் நிலக்கோட்டை, ஆத்தூா், வத்தலகுண்டு வட்டாரங்களுக்குள்பட்ட 425 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.525 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீா் திட்டம் மற்றும் வடமதுரை, வேடசந்தூா், ரெட்டியாா்சத்திரம், திண்டுக்கல் ஒன்றியங்களிலுள்ள 916 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.543 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.