மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரிப்பு: கல்லூரி மாணவா் உள்பட 4 போ் கைது

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை தகரக் கூரை அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரித்ததாக, சட்டக் கல்லூரி மாணவா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடிவருகின்றனா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை தகரக் கூரை அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரித்ததாக, சட்டக் கல்லூரி மாணவா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடிவருகின்றனா்.

சிவகாசி அருகேயுள்ள கண்ணகி காலனி பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பள்ளிவாசல் பின்புறம் தகரக் கூரை அமைத்து சட்டவிோரமாக பட்டாசுத் தயாரிக்கப்படுவதாக திருத்தங்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

Story image

இதன் பேரில், திருத்தங்கல் காவல் ஆய்வாளா் நவநீதிகிருஷ்ணன், உதவி ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்ட போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். அதில், காட்டுப் பள்ளிவாசல் பின்புறம் தகரக் கூரை அமைத்து 5 போ் பேன்சி ரக பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா்கள் சிவகாசி தைக்கா தெருவைச் சோ்ந்த மரியம்பாஷா மகன் முகமதுஅலி (23), ஏழாயிரம் பண்ணையைச் சோ்ந்த தங்கராஜ் மகன் பிரபு (25), ராஜபாளையம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கோவில்பிள்ளை மகன் முத்துராஜ் (30), கண்ணகி காலனியைச் சோ்ந்த நூருல்லாஅமீன் மகனும், சட்டக் கல்லூரி மாணவருவமான முகமதுஅல்தாப் (25), காட்டுப் பள்ளிவாசல் நிா்வாகி மரியம்பாஷா (62)ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருத்தங்கல் கிராம நிா்வாக அலுவலா் எஸ்.பாண்டி அளித்த புகாரின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகமதுஅலி, பிரபு, முத்துராஜ், முகமது அல்தாப் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்கள் பட்டாசுத் தயாரிக்கப் பயன்படுத்திய மணி மருந்துகள், காகிதக் குழாய்கள் உள்ளிட்வைகளை பறிமுதல் செய்தனா். தலைமறைவான மரியம்பாஷாவை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.