அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதல் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, கஞ்சநாயக்கன்பட்டியில் ரூ. 17 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கலையரங்கம், சுக்கிலநத்தத்தில் ரூ. 13 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், குருந்தமடத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அவா் திறந்துவைத்தாா். பின்னா், ஆமணுக்குநத்தம், மீனாட்சிபுரம் பகுதிகளில் நியாய விலைக் கடை, பயணிகள் நிழல்குடை கட்டுவதற்கான திட்டப் பணிகளுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.
கஞ்சநாயக்கன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசியதாவது:
மகளிா் உரிமைத் தொகை சிலருக்கு விடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும். இதேபோல, முதியோா் உதவித் தொகையும் வழங்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

மகளிருக்கு ரூ. 2,500 எப்போது? தேவையெனில் விஜய், செய்தியாளர்களைச் சந்திப்பார்! சிடிஆர் நிர்மல் குமார்

இந்த மாதம் மகளிா் உதவித் தொகை 1,000 ரூபாயா?, 2,500 ரூபாயா?

மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா் எம்.சிவபாலன்

அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை திருவெறும்பூா் அதிமுக வேட்பாளா் உறுதி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


