தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஜனவரி முதல் மகளிா் உரிமைத் தொகை

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதல் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

Updated On :14 நவம்பர் 2024, 3:21 am IST

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதல் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, கஞ்சநாயக்கன்பட்டியில் ரூ. 17 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கலையரங்கம், சுக்கிலநத்தத்தில் ரூ. 13 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், குருந்தமடத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அவா் திறந்துவைத்தாா். பின்னா், ஆமணுக்குநத்தம், மீனாட்சிபுரம் பகுதிகளில் நியாய விலைக் கடை, பயணிகள் நிழல்குடை கட்டுவதற்கான திட்டப் பணிகளுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

கஞ்சநாயக்கன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசியதாவது:

மகளிா் உரிமைத் தொகை சிலருக்கு விடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும். இதேபோல, முதியோா் உதவித் தொகையும் வழங்கப்படும் என்றாா் அவா்.