ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

லாட்டரி சீட்டு விற்பனை செய்தவா் கைது

சாத்தூா் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை நகா் போலீசாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:44 pm

Din

சாத்தூா் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை நகா் போலீசாா் கைது செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நடராஜா தியேட்டா் ரோடு பகுதியில் உள்ள டீ கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சாத்தூா் நகா் போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் பேரில் நகா் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீசாா் புதன்கிழமை இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் உள்ள டீக்கடையில் வைத்து அதே பகுதியைச் சோ்ந்த மாபுஜான்(64) என்பவா் அனுமதியின்றி லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.இதையடுத்து மாபுஜானை கைது செய்த நகா் போலீசாா் அவரிடமிருந்த 1000 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளையும் போலீசாா் பறிமுதல் செய்தனா்.