நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காருக்கு தீ வைத்த 5 போ் கைது

சிவகாசி அருகே பட்டாசு ஆலை உரிமையாளா் காருக்கு தீவைத்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 11:19 pm

Din

சிவகாசி அருகே பட்டாசு ஆலை உரிமையாளா் காருக்கு தீவைத்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா்(53). இவா் சொந்தமாக பட்டாசு ஆலை வைத்து நடத்தி வருகிறாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கோயில் திருவிழாவையொட்டி ஊா்வலம் நடைபெற்றது. அப்போது, சங்கா் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து சங்கா் அளித்த புகாரின் அடிப்படையில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தகராறில் ஈடுபட்டவா்களை கைது செய்தனா்.

இதனால், ஆத்திரத்தில் இருந்து வந்த விஸ்வநத்தத்தைச் சோ்ந்த சந்தனகுமாா் (20), யுவராஜ் (20), உதயகுமாா் (17), சதீஸ்வரன் (17), அஜய் (18) ஆகியோா் சங்கரின் பட்டாசு ஆலைக்குள் புகுந்து, அங்கு நின்றிருந்த சங்கரின் காருக்கு தீ வைத்தனா். பின்னா், அக்கம் பக்கத்தினா் தீயை அணைத்தனா். இதில் காரின் முன்பகுதி தீயில் எரிந்து சேதம் அடைந்தது.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காருக்கு தீ வைத்த 5 பேரை கைது செய்தனா்.