45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆண்டாள் கோயில் ரத வீதிகளில் புதைவட மின்கம்பி இணைப்பு வழங்கத் தாமதம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலைச் சுற்றியுள்ள 4 ரத வீதிகளில் உள்ள வீடுகளுக்கு புதைவட மின்கம்பி இணைப்பு முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
புதைவட கம்பி மூலம் மின் இணைப்புக்காக காத்திருக்கும் வீடு.
Updated On :5 செப்டம்பர் 2024, 12:12 am

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலைச் சுற்றியுள்ள 4 ரத வீதிகளில் உள்ள வீடுகளுக்கு புதைவட மின்கம்பி இணைப்பு முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தமிழகத்தில் முக்கிய கோயில் நகரங்களில் விபத்துகளை தவிா்க்கும் வகையில் தேரோட்டம் நடைபெறும் வீதிகளில், மேல் நிலை மின் கம்பிகள் அகற்றப்பட்டு, புதை வட மின் கம்பிகளாக மாற்றப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோடும் வீதிகளில் புதை வட மின்கம்பி அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

பின்னா், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலைச் சுற்றி தேரோட்டம் நடைபெறும் 4 ரத வீதிகளில் மேல்நிலை மின் கம்பிகளை அகற்றி, புதை வட கம்பி பதிக்க திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டது.

இந்தப் பணிகள் தெற்கு, மேற்கு ரத வீதிகளில் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூலை 26-ஆம் தேதி அமைச்சா்கள் சாத்தூா் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் மின் விநியோகத்தை தொடங்கி வைத்தனா். ஆனால், திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் தற்போது 50 வீடுகளுக்கு மட்டுமே புதைவட மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்து விருதுநகா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் லதா கூறியதாவது:

ஆண்டாள் கோயில் தெற்கு, மேற்கு ரத வீதிகளில் மேல்நிலை மின் கம்பிகளை, புதைவட கம்பி முறையில் பூமிக்கு அடியில் பதிப்பதற்கான பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. இதில் படிப்படியாக வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து வீடுகளுக்கும் புதைவட மின் இணைப்பு வழங்கப்படும், என்றாா் அவா்.